இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூக்கள் பூத்த மரங்கள் புன்னகைக்கும் பெண்கள் போல் அழகு!

படம்
    இலைகள் படபடக்கும் இன்பம் வானுக்கும் பூமிக்கும் பாலம் அமைத்திடும் நித்தம் பறவைகள் வந்து தங்கும் முற்றம்! இங்கிருந்துதான் இன்னிசைக் கச்சேரி காலையும், மாலையும். துயிலெழுப்பும் சங்கீதச் சத்தம்!   பூக்கள் பூத்த மரங்கள் … புன்னகைக்கும் பெண்கள் போல் அழகு! தென்றல் காற்றில் மெல்ல அசையும் மரங்கள்… நண்பன் ஒருவன் ஆமோதித்து தலையசைப்பது போன்ற நினைவு,     சூரிய ஒளிதனை தன் இலைக்கரங்களில் வாங்கி பருகும் நீயும், நானும் அருந்த இன்பக் கனிகளை அருளும்!   அன்பாய் வளர்ந்த ஆலமரம், அரசமரம் ஆகிவிடுகிறது சட்டென ஒரு பேருந்து நிறுத்தம். புயலினை எதிர்த்து போரிட்ட மரங்களின் முகங்களில் சாய்ந்து விட்ட மரங்களை நினைத்து  சின்ன வருத்தம்!   விண்ணை முட்டி வளர்ந்தாலும் தன் மடியில் வந்து அமரும் களைத்த பாதசாரிக்கும்  கவரி வீசும்! உழைத்துக் களைத்த கால்கள் நடந்து போகும் பாதையில் .. இவை வண்ணப் பூக்களை அள்ளி அள்ளி வீசும்!   ஆக்கம்: கவிராஜன்                   ...

அன்னல் காந்தியின் புன்னகையினைக் கண்டு மல்லிகையும் கலங்கியது!!

படம்
    பூத்துக் குலுங்கும் பூக்கள் போடுவதோ புன்னகை மந்திரம்!! அவை ஒயாத அலையடிக்கும்   அன்பின் வாசனை! தென்றலுக்கு தலையாட்டும் பூக்கள் அழகின் யோசனை! பூவினங்கள்... காலைப் பெண்ணின் சலிக்காத கருணை உணர்த்தும் . அன்பின், காதலின் பெருமை! அடேயப்பா.. பூவுக்குத் தான்   பொழுதெல்லாம் எத்தனை எத்தனை வேலைகள்? ஒற்றைப் பூ   காதலின் துடிப்பு !   மாலையாக மாறிவிட்ட பூக்கள்   பெற்றுத் தரும் எவருக்கும் மதிப்பு பெண்ணின் கூந்தலில் அமர்ந்த பூவோ பேரன்பின் சிலிர்ப்பு! ஆணின் கைகளில் அமர்ந்த பூ   அது அன்பின் அரவணைப்பு!   செடியினில் பூத்த பூ அன்னம் கொடியினில் பூத்த பூ   இதயத்தினை வருடும் வண்ணம். மரத்தினில் பூத்த பூ பூச்சொரிதல்   நடத்தும் புன்னகை மன்றம்! நந்தவனத்தில் பூத்த பூ இறைவனின் உள்ளம்! கடையில் விற்பனைக்கு வந்த பூ காசு கொடுத்தால் கிடைக்கின்ற மயக்கும் இன்பம்.   பூக்களுக்குத்தான் எத்தனை எத்தனை ஆவல்? பண்டித  நேருவின் கோட்டுப் பொத்தானில் அமர்ந்த பூ  அதுவும்    தேச  விடுதலையை விரும்பியது அன்னல் ...

அன்பினை அனைவரின் மீதும் எறியும் ஆகாயவில்!

படம்
வண்ண நீரினை சுமந்து செல்லும் வானூரின் வைகை இதயத்தின் ஓளிந்திருக்கும் காதலை… வரைந்து பார்த்தால் கிடைத்திடும் இப்படியொரு இனிமை… இளமை… இது அறிஞனின் வார்த்தைகள் போல் ஆயிரம் முகம் காட்டும்! கவிஞனின் வார்த்தைகள் போல் ஒளிந்து மறைந்து பின் தோன்றி   சுகம் காட்டும்! இது இறைவன் எனும் புலவன் எழுதிய ஏழு வரி திருக்குறள்! பூக்களின் அழகினை புடம் போட்டுச் செய்த ஆகாய அருள்! இது பறந்து செல்லும் ஓரு தேவ பறவையின் ஆனந்தச் சிறகு அதனால்தான்… சில கணங்களிலேயே காணாமல் போய் விடுகிறது! இது மறந்து போய் விடாத பால்ய நினைவுகள் அதனால்தான் … எப்போதும் வண்ணங்களாகவே காட்சியளிக்கிறது! இது அன்பினை அனைவரின் மீதும் எறியும் ஆகாயவில்! இது புன்னகை மாறாத தேவ உதடுகளின் ஆனந்தச் சொல்! காலகாலமாய் காட்சிக்கு வரும் களிப்பான நாடகம் எழுதி மேடையேற்றியவன் யார் என்பது பூடகம்! இது பூக்கள் வண்ணங்களைக் கற்றுக் கொண்ட ஆசிரியன் வானில் வந்து நின்ற பொழுதில் பூமியெங்கும் அன்பின் பூச்சொரியும் ஆனந்தன் ஆக்கம்: கவிராஜன்

காலைப் பெண்ணின் கட்டுக்கடங்காத மோகம்!

படம்
அன்பின் விழாக்கோலம்! காதலைக் கற்றுத்தரும் நித்ய பாடம்... காலைப் பெண்ணின் கட்டுக்கடங்காத மோகம்! சோலைகள் என்பன.. பூமியில் ஆங்கே திட்டுத்திட்டாய் தெறித்திருக்கும் சொர்க்க லோகம்! இயற்கையின் தேசத்தினை ஆண்டு வருபவள் இந்த இளவரசி! இவை செடிகள் பெற்ற ஞானம் அன்பினை அனுதினமும் வளர்க்கும் இந்த யாகம்! உயர்ந்த மரங்களில் பூத்திருக்கும் பூக்கள் இன்னொரு வானவில்லாய் தோன்றும் ஒற்றைப் பூக்கள் குறுநகை என்றால்.. கொத்தாய் மலர்ந்த மலர்கள் வளர்ந்து கொண்டே போகும் புன்னகை! பெண்களும் தாம் வேண்டிப் பெற வேண்டிய அழகினைப் பெற்றதால்தான் பூக்களை   கூந்தலில் அணிந்து மகிழ்கின்றனர் இவை கடைத்தெருவுக்கு வந்தாலும்.. கலைச்செறுக்குள்ள கவிஞனைப் போல தன்னை வித்தியாசப் படுத்திக்கொள்ளும் வாசனை என்ற கண்ணுக்கு தெரியாத விளம்பரப் பலகையினை இவை கடைத்தெருவெங்கும் வைத்து விடும் ஆக்கம்: கவிராஜன்

புரளி

படம்
‘உத்தமனே, நீ படைத்த உலகம் தனில் ஏன் இத்தனை தீமைகள்?’ இறைவன் பதிலிறுத்தான்: ‘உலகம் என்னில் இருக்கிறது; உலகத்தில் நான் இல்லை’ ‘புரியவில்லையே’ என்றனர் பண்டிதர் ‘உலகமும் மனிதனும் எமது படைப்பு; கற்பிதமும் சதியுமாக அவன் உருவாக்கிய உலகம், அவனது படைப்பு! அழியா நிசமொன்று இது போல உம்மால் சொல்ல ஆகுமா? தலைவன் வினவ யான் செப்பினேன்: மனிதன் உருவாக்கிய புது உலகிலே ... ‘பெயர் தாங்கி புரளிகள் வருகின்றன; புரளிகளினுள் ஆள் இல்லை’ எங்குமே இல்லை! ஆக்கம்: கவிஞர். புதுயுகன்

பெற்றோர்மை!

படம்
ஏழ்கடல் சூழ்ந்த எழிலாம் உலகில் வாழ்வது நிறைவது வளர்ப்பின் முறையால் ஆழ்மன நூலால் ஆகிடும் எண்ணம் வாழ்வாம் ஆடையை வளர்ப்பே நெய்யும் வேகம் கடந்த விரிந்த அறிவால் தாகம் தணிந்த தெளிவுடை மனதால்  போகும் பாதையில் பிள்ளையும் வளர ஆகும் தந்தை அன்னையின் அறிவு  பெற்றோர் வீட்டில் போடும் சட்டம் பிள்ளைகள் அறிவின் வரைமுறை விட்டம் தொல்லைகள் அல்ல கொடுங்கோல் புரிய நல்லவை விளையும் எல்லைகள் விரிய வளர்ந்த மரத்தில் வம்பாய் நீரிடல் தளர்ந்த மதியில் தோன்றும் திட்டம் வளர்ந்த பின்னர் வளவள வென்றே உளரல் போன்ற உரைகள் வேண்டாம் திடமாம் மனதின் தன்னம் பிக்கை நடமே இடுமே நல்லிடம் தந்தே மடமே வளர்ந்த மக்களை மிதித்தல் குடத்தின் நிறைபோல் கடலாய் விரிக சிந்தையில் நிற்கும் சிறந்த பெற்றோர் விந்தை உலகில் வாரிசு களையே சந்திர இதமாய் சத்தியத் துணையாய் அந்தியின் அழகாய் அரவணைப் பவரே!                   ஆக்கம்: கவிஞர். புதுயுகன்

விஞ்ஞானிகள் தான் வியர்க்க வியர்க்க வினையாற்றுகின்றனர்!

படம்
பொல்லாத கோரனா… நீ மனித சமூகத்தின் மீது கல்லெறிந்து நிற்கின்ற கயவன்!  எங்கள் புன்னகையை கொள்ளையிட வந்த கள்வன் வானத்தில் வட்டமிடும் வண்ணப் புறாக்களாய் இருந்த எங்களை எலி வளைக்குள் அடைத்து விட்ட துயரன் நீ தறி கெட்டு ஓடுவதால் எங்கள் வாழ்க்கை வண்டியினை குடம் சாய்த்து விடலாம் என்று நினைத்து விட்ட மூடன்! நுண்ணோக்கியில் பார்த்தால் தான் உன் கோர முகமே தெரியும்… ஆனாலும் மனிதனை பின்னோக்கி தள்ள நீ பிரயத்தனப் பட்டுவிட்டாய் கடவுளர்களும் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்க…. விஞ்ஞானிகள் தான் வியர்க்க வியர்க்க வினையாற்றுகின்றனர்! தடுப்பூசி எனும் தண்டம் கொண்டு உனையழிக்க… மனிதம் மீண்டும் இன்பப் பறவைகளாய் சிறகடிக்க! ஆக்கம்: கவிராஜன்

உலகின் ஒரே மதம்... நம்பிக்கை!!

படம்

மறதி அணிக !!

படம்
மறதி அணிக !! கசடறக் கற்ற நெளிவு சுளிவுகளின் கசடுகள் கழிய - மறதி அணிக... இன்றையக் கணக்கை இரவில் கரைத்து.. நாளைய நாளை புதிதாய்த் திறக்க - மறதி அணிக!! மடிந்த சண்டைகள், முடிந்த காதல், முடியாத முகத்திதி மூன்றும் எதிர் வந்தால் - மறதி அணிக சாதனையின் கர்வம், சோதனையின் தொய்வு இரண்டும் வேகத்தடை - மறதி அணிக எதிரியின் பலத்தை மனதில் பின்வைக்க பலவீனம் மாற்றி உம் பலத்தை முன்வைக்க அவ்வப்போது, ஆங்காங்கே - மறதி அணிக கற்கும் போது கற்ற திமிரும் கற்பிக்கும் போது கல்லாத துறையும் தற்கொலையின் தம்பிகள் - மறதி அணிக பேரின்பப் பயணத்தில் சிற்றின்பச் சாலையையும் சிற்றின்பச் சாலையில் பேரின்பப் பிரச்சாரத்தையும் மறந்தும் செய்யாமல் - மறதி அணிக சிறுதீமைகளாம் புகை மதுவும் பெருந்தீமைகளாம் பொறாமை புரளியும் தாண்டிக் கடக்க - மறதி அணிக பிறர் செய்த தீமையும் நீர் செய்த நன்மையும் நீங்காமல் நின்றால் - மறதி அணிக முடியாது தெரியாது மாறாது என்ற எதிர்மறைகளை எதிர்கொண்ட மறுநொடியே  -  மறதி அணிக நிறைந்த வழியும் நினைவுகள் மாளிகையின் ஒற்றைச் சாளரம் மறதி...

நிலா...அழகில் இது வெண்தாமரை!

படம்
இரவின் நற்சிந்தனை! வானுக்கு வந்த வளமையான கற்பனை! அழகில் இது வெண்தாமரை! பழகினால் இது சொல்லித் தரும் காதலை… குணத்தில் குன்றென நிற்கும்… இதன் குளிர் பார்வையில் பெய்திடும் பூ மழை! களிப்போடு வந்து…  மனிதரின் களைப்பினை போக்கிடும் இனிமை !  முனைப்போடு நாளும் முன்னே வந்திடும் கடமை! விளக்கில்லாத வீடுகள், வீதிகள் இதன் ஓளியில் குளித்திருப்பது மந்திர மகிமை இது இரவு ராஜனின் மகுடத்தில் அமைந்த கோஹினூர் வைரம்! நிலா நின்றெரியும் வரை பூமியில் நீளாது… துயரம்! ஆக்கம்: கவிராஜன்

கொலைகாரக் கொரோனா... நீ நாடு விட்டு நாடு தாவும் மாயாவி!

படம்
கொலைகாரக் கொரோனா! நீ… நாடு விட்டு நாடு தாவும் மாயாவி! மனித உயிர்களை மலிவாக்கி விட்ட மரண வியாபாரி அண்டை வீட்டுக்காரனையும் அயலானாய் ஆக்கி விட்ட அருபம்! எமனை விட கொடியது கண்ணுக்குத் தெரியாத உன் சொரூபம்! மனித சமூகம்… உன்னை சீக்கிரம் கை கழுவ வேண்டும்.! ‘ `அச்’ என்று யாராவது தும்மினாலும் நோய் பரவி விடுமோ என்ற அச்சம்! `பக்” என்று இருமினாலும் கொரோனா தொற்றி விடுமோ.. என பதை பதைக்கிறது நெஞ்சம்! இத்தாலியில் நீ மரணத்தின் கூட்டாளி… இங்கிலாந்து இளவரசரையும் விட்டு வைக்காத கொடிய  கோமாளி! அமெரிக்காவிலும் அடி எடுத்து வைத்து விட்ட சீனாவின் இறக்குமதியே.. இந்தியாவுக்குள்ளும் வந்து விட்ட சிறுமதியே மனிதம் போக வேண்டியது வெகு தூரம்! சின்னஞ் சிறு வைரஸே...  உன்னால் தடைப்படாது அது ஒரு போதும்! புற்றீசல் போல் கிளம்பி விட்டாய்.. உன் வாழ்வு சில தினங்களில் முடியப் போகிறது என்பதனை...  ஏனோ நீ மறந்து விட்டாய்! ஆக்கம்: கவிராஜன்

`கொரோனா... ஒரு வினோத வைரஸ்'

படம்
கண்ணுக்குத் தெரியாத கயமை! உயிருக்கு உலை வைக்கும் பகைமை! அருகில் இருந்து தும்மினாலும் தொற்றிக் கொள்ளும்.. யாராவது இருமினால்...  எட்டிச்செல்லும்! தூரத்தில் இருந்தால் மட்டுமே இது விட்டுச்செல்லும்! அடிக்கடி கை கழுவக் கற்றுக்கொள்ளும்! ஆம்! இது ஒரு வினோத வைரஸ்! ஆணினத்தை அதிகம் தாக்குகிறது! பெண்களை குறைவாக... குழந்தைகளை இன்னும் குறைவாக... இது தேசங்களெங்கும் பரவி விட்ட நாசம்! தெய்வங்களும் பயந்து ஒதுங்கி விட்ட துவேஷம்! இதன் கட்டற்ற தன்மை... அஞ்ஞரனிகளுக்கு   புரியவில்லை விஞ்ஞரனிகளுக்கும் ஏனோ விளங்கவில்லை! மனித குலத்திற்கு இந்நோயின் தடுப்பாற்றால் வர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்! தடுப்பூசி வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம்! என்கிறது அறிவியல்! அமெரிக்கா சீனாவைக் குறை சொல்கிறது.. இந்தியா அமெரிக்காவை, இத்தாலியைக் குறை சொல்கிறது கொண்ட பாசங்கள் புலம்புகின்றன.. தேசங்களும் நடுங்குகின்றன!   கோர முகம் கொண்ட கொரோனா.. நீ மனித இனத்தை அழிக்க வந்த மாறனா? அல்லது எங்களுக்கெல்லாம் சுக...

கொரோனாவே போய்விடு !!

படம்
கொரோனாவே போய் விடு! வையகத்தை நடுங்க வைத்தது போதும்... சீனப் பட்டினை சிங்காரமாய் தந்த நாகரீக பூமியிலிருத்து வந்த நய வஞ்சக வைரஸே! நீ மனிதர்களை துரத்தாதே என மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். மனித உயிர்கள் என்ன அத்தனை மலிவா? உன் போன்ற மனசாட்சியில்லாத உயிர் கொல்லிக்கு அத்தனை துணிவா? இத்தாலி ஸ்பெயின் அமெரிக்கா இங்கெல்லாம் பேயாட்டம் போட்டு விட்ட திறந்த வீட்டுக்குள் நுழையும் நாயாட்டம். இந்தியாவுக்குள் நுழைந்தாயோ? மாலைகளில்.. மனிதக் கடலாய் மாறி விடும் எங்களது மெரினா கடற்கரை.. கலகலப்பில்லாத பாலை வனமாய் காட்சியளிக்கிறது தஞ்சை பெருவுடையாரும் ஏழு மலையானும் மதுரை மீனாட்சியும் கூட எங்களுக்கு தரிசனம் தராமல் கோவிலுக்குள்ளேயே முடங்கி விட்டனர். நிலவுக்குப் போய் வந்தென்ன.. செவ்வாயினை சீண்டியென்ன… கொரோனா வைரஸை கொல்வது எப்படி என்ற வித்தை மனிதன் இன்னும் கற்றபாடில்லை புன்னகை மறந்து பல நாட்களாயிற்று ! வீடுகளுக்குள் அடைந்து சில நாட்களாயிற்று!          ...

`காதலின் உறைவிடம்'

படம்
காலை போட்ட வண்ண மந்திரம்... வாசனை முந்திடும், இனிமைகள் தந்திடும்,   இயற்கையின் தந்திரம்! காலை எழுதிய சித்திரம் வண்ணக் கோலங்களாய் சிரித்திடும்! காதலின் உறைவிடம், காலையின் பெருமிதம், நட்பாய் குலவிடும், மகிழ்ச்சியே மலர்முகம்! நாளும்.. பூவென்ற புன்னகை செய்திடும் இந்த செடிகள் கற்ற இங்கிதம்!

அன்பின் குவியல்!

படம்
அன்பின் குவியல்! செடி பெற்ற பாராட்டு! வண்ணங்கள் பாடும் தாலாட்டு… வாசனையோ நாசியினை நீராட்டும் இவை செல்விகளும் விரும்பும் அழகின் செவ்வியல்! பாரில் உள்ள நிறங்களையெல்லாம்… இவை போடும் பட்டியல்! வானவில்லும் இறங்கி வந்து வணங்கிச் செல்லும் பண்பியல்! இவை காலையின் அரங்கில் கைதட்டல் பெற்ற கவிதைகள்! பூக்களே பூமியில் .. அன்பின் குவியல்! கவி மந்திரன்