`காதலின் உறைவிடம்'
காலை போட்ட
வண்ண மந்திரம்...
வாசனை முந்திடும்,
இனிமைகள் தந்திடும்,
இயற்கையின் தந்திரம்!
காலை எழுதிய
சித்திரம்
வண்ணக் கோலங்களாய்
சிரித்திடும்!
காதலின் உறைவிடம்,
காலையின் பெருமிதம்,
நட்பாய் குலவிடும்,
மகிழ்ச்சியே
மலர்முகம்!
நாளும்..
பூவென்ற புன்னகை செய்திடும்
இந்த செடிகள்
கற்ற இங்கிதம்!

கருத்துகள்