புரளி
‘உத்தமனே, நீ படைத்த உலகம் தனில் ஏன் இத்தனை தீமைகள்?’ இறைவன் பதிலிறுத்தான்: ‘உலகம் என்னில் இருக்கிறது; உலகத்தில் நான் இல்லை’ ‘புரியவில்லையே’ என்றனர் பண்டிதர் ‘உலகமும் மனிதனும் எமது படைப்பு; கற்பிதமும் சதியுமாக அவன் உருவாக்கிய உலகம், அவனது படைப்பு! அழியா நிசமொன்று இது போல உம்மால் சொல்ல ஆகுமா? தலைவன் வினவ யான் செப்பினேன்: மனிதன் உருவாக்கிய புது உலகிலே ... ‘பெயர் தாங்கி புரளிகள் வருகின்றன; புரளிகளினுள் ஆள் இல்லை’ எங்குமே இல்லை! ஆக்கம்: கவிஞர். புதுயுகன்

கருத்துகள்
நம்பிக்கையோடு நாமும் அதைச் செய்யலாமே என "நச்" எனச் சொல்கிறது
இந்த நான்கு வரிக் கவிதை!