புரளி
‘உத்தமனே, நீ படைத்த உலகம் தனில்
ஏன் இத்தனை தீமைகள்?’
இறைவன் பதிலிறுத்தான்:
‘உலகம் என்னில் இருக்கிறது;
உலகத்தில் நான் இல்லை’
‘புரியவில்லையே’ என்றனர் பண்டிதர்
‘உலகமும் மனிதனும் எமது படைப்பு;
கற்பிதமும் சதியுமாக
அவன் உருவாக்கிய உலகம்,
அவனது படைப்பு!
அழியா நிசமொன்று இது போல
உம்மால் சொல்ல ஆகுமா?
தலைவன் வினவ யான் செப்பினேன்:
மனிதன் உருவாக்கிய புது உலகிலே ...
‘பெயர் தாங்கி புரளிகள் வருகின்றன;
புரளிகளினுள் ஆள் இல்லை’
எங்குமே இல்லை!
ஆக்கம்: கவிஞர். புதுயுகன்

கருத்துகள்