இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தத்துவத்தினை விட மிகும்... தாயன்பே இதுவென்றால் தகும்!

படம்
வானம் சொல்லும் வந்தனம் வான வீரன் பூசிக்கொண்டான் மார்பில் சந்தனம் கண்கள் காணும் சித்திரம் களவு போயினும் இது நெஞ்சுக்குள் பத்திரம்!   நித்தம் தந்திடும் வரம் புத்தனைப் போல் பேரன்பின் குணம் தத்துவத்தினை விட மிகும் தாயன்பே இதுவென்றால் தகும்!   இது காதலியின் வண்ணப் புருவமா? வாழ்வில் வந்துவிட்டு போய்விடுகின்ற இளமைப் பருவமா? வானவில்லுக்கும், பூக்களுக்கும் தூரத்துச் சொந்தமா? வண்ணங்கள் கொண்ட நெருக்கமான பந்தமா?   இது வானவில்லென்றால் ‘அன்பே’ இதுவெய்த அம்பெனலாம் கவிதைகளும் சொல்ல முடியாத கலைத்திறம் வானச்சுவடியில் எழுதி வைத்த வண்ணங்களின் சரித்திரம் நல்ல நண்பனைப் போல் வேண்டும் போது துணை வரும் பின்னர் சொல்லாமல் விடைபெறும்! -கவிராஜன்  

சித்திரை நிலவு போல் இதம்!!

படம்
    காதலின் கலை முகம் ஓவியப் பாவை போல் நலம்! யமுனை நதிக்கரைகளில் இந்த அன்பின் தவம் உலகம் வந்து தரிசிக்கும் உன்னதம்.   சித்திரை நிலவு போல் இதம் புத்தனின் கருணை போல் பதம் காதலை சித்திரமாய் வரைந்தால் ... அதனைக் கட்டிடமாய் சமைத்தால் இப்படித்தான் இருக்குமெனச் சொல்கிறது மனம்!   வித்தகரும் வியக்கும் விதம் புத்தழகாய் நித்தம் தோன்றும் உளம் உண்மைக் காதலுக்கு இது உருவகம் புத்தகத்தில் இல்லாத காவியமாய் இது நிலை பெறும்!   முத்தழகு போன்ற முகம் தாஜ்மஹால் மட்டும் அன்றே இருந்திருந்தால் கங்கை கொண்ட சோழன் அதன் பேரழகில்  மயங்கி யமுனை கொண்ட சோழன் ஆகியிருப்பான்.   காதலைப் பெண் முன் மொழிவதில்லை அதனை வழி மொழிகிறாள்…. தாஜ்மஹால் அதனை மறு மொழிகின்றது. -கவிராஜன்