இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூக்கள் பூத்த மரங்கள் புன்னகைக்கும் பெண்கள் போல் அழகு!

படம்
    இலைகள் படபடக்கும் இன்பம் வானுக்கும் பூமிக்கும் பாலம் அமைத்திடும் நித்தம் பறவைகள் வந்து தங்கும் முற்றம்! இங்கிருந்துதான் இன்னிசைக் கச்சேரி காலையும், மாலையும். துயிலெழுப்பும் சங்கீதச் சத்தம்!   பூக்கள் பூத்த மரங்கள் … புன்னகைக்கும் பெண்கள் போல் அழகு! தென்றல் காற்றில் மெல்ல அசையும் மரங்கள்… நண்பன் ஒருவன் ஆமோதித்து தலையசைப்பது போன்ற நினைவு,     சூரிய ஒளிதனை தன் இலைக்கரங்களில் வாங்கி பருகும் நீயும், நானும் அருந்த இன்பக் கனிகளை அருளும்!   அன்பாய் வளர்ந்த ஆலமரம், அரசமரம் ஆகிவிடுகிறது சட்டென ஒரு பேருந்து நிறுத்தம். புயலினை எதிர்த்து போரிட்ட மரங்களின் முகங்களில் சாய்ந்து விட்ட மரங்களை நினைத்து  சின்ன வருத்தம்!   விண்ணை முட்டி வளர்ந்தாலும் தன் மடியில் வந்து அமரும் களைத்த பாதசாரிக்கும்  கவரி வீசும்! உழைத்துக் களைத்த கால்கள் நடந்து போகும் பாதையில் .. இவை வண்ணப் பூக்களை அள்ளி அள்ளி வீசும்!   ஆக்கம்: கவிராஜன்                   ...

அன்னல் காந்தியின் புன்னகையினைக் கண்டு மல்லிகையும் கலங்கியது!!

படம்
    பூத்துக் குலுங்கும் பூக்கள் போடுவதோ புன்னகை மந்திரம்!! அவை ஒயாத அலையடிக்கும்   அன்பின் வாசனை! தென்றலுக்கு தலையாட்டும் பூக்கள் அழகின் யோசனை! பூவினங்கள்... காலைப் பெண்ணின் சலிக்காத கருணை உணர்த்தும் . அன்பின், காதலின் பெருமை! அடேயப்பா.. பூவுக்குத் தான்   பொழுதெல்லாம் எத்தனை எத்தனை வேலைகள்? ஒற்றைப் பூ   காதலின் துடிப்பு !   மாலையாக மாறிவிட்ட பூக்கள்   பெற்றுத் தரும் எவருக்கும் மதிப்பு பெண்ணின் கூந்தலில் அமர்ந்த பூவோ பேரன்பின் சிலிர்ப்பு! ஆணின் கைகளில் அமர்ந்த பூ   அது அன்பின் அரவணைப்பு!   செடியினில் பூத்த பூ அன்னம் கொடியினில் பூத்த பூ   இதயத்தினை வருடும் வண்ணம். மரத்தினில் பூத்த பூ பூச்சொரிதல்   நடத்தும் புன்னகை மன்றம்! நந்தவனத்தில் பூத்த பூ இறைவனின் உள்ளம்! கடையில் விற்பனைக்கு வந்த பூ காசு கொடுத்தால் கிடைக்கின்ற மயக்கும் இன்பம்.   பூக்களுக்குத்தான் எத்தனை எத்தனை ஆவல்? பண்டித  நேருவின் கோட்டுப் பொத்தானில் அமர்ந்த பூ  அதுவும்    தேச  விடுதலையை விரும்பியது அன்னல் ...